Drugs in Siddha

Drugs in Siddha medicines Saint Thiruvalluvar explains four requisites of successful treatment in the name of medicine. There are the patient, the physician, the medicine and the pharmacist. It is commensurate to all system of medicine. The Siddha drug delivery system is classified in to internal medicine and external therapies. The medicines are prepared from Mooligai(Medicinal plants), Thadu(Inorganic substances) and Sangamam(Animal products).

The Inorganic resources are special and unique strength of Siddha medicine, further classified as Uppu( water-soluble Inorganic substances or drugs give out vapour when put in to fire), Padanam(drugs not dissolved in water but emit vapour when fired, Uparasam(similar topadanam but differ in their fast action), Ulogam( not dissolved in water but melt when fired), Sootham( drugs which are compound of mercury).

தேரையர் பிணியணுகா மருத்துவம்

#திண்ண மிரண்டுள்ளே சிக்க வடக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல்-
உண்ணுங்கால்
நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி.

மலம், சிறுநீர் இரண்டையும் அடக்க வேண்டாம். ஆண், பெண் மோகம் அதிகம் பெருகாமல் இருக்கப் பழகவும். உணவு உண்ணும்போது தண்ணீர் அருந்துவதைப் குறைக்கவேண்டும். பால்படு பொருட்களில் ஒன்றான மோரினில் நிறைய நீரினை நன்கு கலந்து பயன்படுத்த வேண்டும். நெய்யானது தீக்கூறு உடையதால் அதனை சட்டியில் வைத்து நெருப்பேற்றி உருகியவுடன் உணவுடன் கலந்து உண்ண வேண்டும். இவ்வாறு பின்பற்றுவோரின் பெயரை சொன்னாலே அது அண்டாமல் ஓடிவிடும்.

#பாலுண்போம்; எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்,
பகற் புணரோம், பகல் துயிலோம்;
பாயோ முதரமும் மூத்த ஏலஞ்சேர் குழலியரோடு
இளவெளிலும் விரும்போம்;
இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடது கையில் படுப்போம்; 
மூலஞ்சேர் கறி நுகர்வோர்; மூத்த தயிர் உண்போம்;
முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் உண்ணோம்
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கு இங்கு ஏதுகலை நாம் இருக்கும் இடத்தே!

பால் சேர்த்த உணவுகளை தினமும் உண்ண வேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி தலைமுழுக்கு எடுத்தவுடன், வெந்நீரில் குளிக்க வேண்டும். பகலில் ஆண், பெண் புணர்ச்சி கூடாது. பகலுறக்கம் கொள்ளக்கூடாது. ஆண் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுடன் உறவு கொள்ள விரும்பக்கூடாது. இளவெயில் உடல் மீது படுவதை தவிர்க்க வேண்டும்.
மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கக்கூடாது. விந்தணுக்களை தேவையின்றி வெளியேற்றக்கூடாது. உறங்கும் போது இடது கையை கீழே வைத்து, அதன் மேல் தலையை வைத்து உறங்குவது நல்லது. மூலக் கடுப்பினை உண்டாக்கக்கூடிய காய், கனிகளை நுகரக்கூடாது. முதல்நாளில் தயாரான பழைய தயிர் உண்பது நல்லது. முதல் நாளில் சமைக்கப்பட்ட உணவு கெடாமல் அமுதமாகி இருந்தாலும் உண்ண வேண்டாம். நன்கு பசித்த பிறகு உண்ண வேண்டும்.

MALE INFERTILITY IN SIDDHA

In Siddha medicine, infertility in male is called as ஆண் மலடு(Aan maladu), ஆண்மை குறைபாடு(Anmai Kuraipadu).

Causes of Male Infertility:

1. 25 சதவீதம் மன அழுத்தத்தின் காரணமாகவே ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது . மன அழுத்தம் ஏற்படும்போது கார்டிசால் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் உடல் உறவிற்கான ஹார்மோன் சுரப்பில் வித்தியாசம் ஏற்பட்டு விறைப்புத்தன்மை குறைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், மன அழுத்தம் காரணமாக உடல் உறவில் கவனம் இல்லாமல் விந்து வெளியேற்றம் குறைய வாய்ப்பு உள்ளது .

2. அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப்பழக்கம், நீரிழிவு நோய், மனநோய்கள், இரத்த கொதிப்பு, சில நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஆணுறுப்பு விறைப்பு குறைகிறது.

3. அதிகமான வெப்பத்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது, உதாரணத்திற்கு இராசயன தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத்துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Continue reading “MALE INFERTILITY IN SIDDHA”

“பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மைக்கான காரணங்கள்”

“பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மைக்கான காரணங்கள்”

அகத்தியரின் கர்பக்கோள் என்னும் நூலில்

“இசைந்தொரு பெண்மலடு எங்குமில்லை”

“எதனாலே மலடான சேதி கேளு
அசைந்திருக்கும் பேயாலும் பித்தத்தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாயுவாலும்
பிசைந்த கர்ப்பப் புழுவாலும் கிரகத்தாலும்
பிணியாலும் மேகி வைசூரியாலும் 
துசங்கெட்ட கலவியினால் துலங்காமல்
பிள்ளையில்லை சொல்லக்கேளே”
என்று பெண்கள் குழந்தையின்மைக்கான காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.

Continue reading ““பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மைக்கான காரணங்கள்””